2047 ஆம் ஆண்டிற்குள் அரிவாள் செல் இரத்த சோகையை ஒழிப்பதற்கான தேசிய அரிவாள் செல் இரத்த சோகை ஒழிப்பு இயக்கத்தை (NSCEM) இந்தியப் பிரதமர் மத்தியப் பிரதேசத்தின் ஷாதோல் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டம் 3 ஆண்டுகளுக்குள் (2023 முதல் 2026 ஆம் ஆண்டு வரை) இந்தியா முழுவதும் 40 வயதிற்குட்பட்ட சுமார் 7 கோடி மக்களிடம் பரிசோதனை மேற்கொள்வதை இலக்காகக் கொண்டுள்ளது.
இது பழங்குடியினரின் சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிப்பதுடன், முன்கூட்டியே பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு மூலம் அரிவாள் செல் நோயின் மரபணு பரவலைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சுகாதாரம் மற்றும் திருமணம் தொடர்பான விழிப்புணர்வுக்கு உதவும் வகையில் பயனாளிகளுக்கு 'அரிவாள் செல் மரபணு நிலை அட்டைகள்' வழங்கப்பட்டன.
இந்தத் தொடக்க விழாவின் போது சுமார் 3.57 கோடி ஆயுஷ்மான் பாரத் PM-JAY அட்டைகளும் விநியோகிக்கப்பட்டன.
இத்திட்டமானது இந்தியாவின் 17 அதிக கவனம் செலுத்தும் மாநிலங்களில் தேசிய சுகாதார இயக்கத்தின் (NHM) கீழ் செயல்படுத்தப்படுகிறது.