அருகி வரும் தாவர இன வளங்காப்பு திட்டம் – உத்தரகாண்ட்
July 25 , 2025 119 days 136 0
உத்தரகாண்ட் மாநிலமானது 14 மிகவும் அருகி வரக்கூடிய "செந்நிறப் பிரிவில்" உள்ள தாவர இனங்களின் பட்டியலை புதுப்பிக்க ஒரு தனித்துவமான திட்டத்தைத் தொடங்கி உள்ளது.
நான்கு ஆண்டுகால சாகுபடி மற்றும் வாழ்விட ஆய்விற்குப் பிறகு அரிய தாவரங்களை அவற்றின் இயற்கை வாழ்விடங்களில் மீண்டும் அறிமுகப் படுத்துவதை இது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இப்பகுதியானது 69 சதவீத வனப்பகுதியையும், வனவிலங்கு வளங்காப்பில் வலுவான தேசிய இருப்பையும் கொண்டுள்ளது.