குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான அருண் கோயலை தேர்தல் ஆணையத்தின் தேர்தல் ஆணையராக (EC) நியமித்துள்ளார்.
ஒருவர் ஆறு ஆண்டுகள் அல்லது 65 வயது பூர்த்தியடையும் வரை, இவற்றுள் எது முந்தையதோ அதுவரை தேர்தல் ஆணையர் அல்லது தலைமை தேர்தல் ஆணையர் பதவியை வகிக்க முடியும்.
1985 ஆம் ஆண்டு பணித் தொகுதியைச் சேர்ந்த பஞ்சாப் பணிப் பிரிவு பகுதியின் அதிகாரியான கோயல், தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே ஆகியோருடன் தேர்தல் ஆணையத்தில் இணைந்து பணியாற்ற உள்ளார்.
கோயல் 2027 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை இப்பதவியில் இருப்பார்.