அர்ஜுனா சஹாயக் நீர்ப்பாசனத் திட்டமானது உத்தரப் பிரதேசத்தில் தொடங்கப்பட உள்ளது.
இந்தத் திட்டமானது பிரதமரால் தொடங்கி வைக்கப்படவுள்ளது.
இந்த நீர்ப்பாசனத் திட்டமானது விவசாயிகளுக்கு நேர்மறை மாற்றங்களைக் கொண்டு வர உள்ளது.
இது தசான் நதியின் மீது கட்டப்பட்டு வருகின்றது.
இந்தத் திட்டமானது உத்தரப் பிரதேசத்தில் உள்ள பாண்டா, மஹோபா மற்றும் ஹமீர்பூர் ஆகிய பகுதிகளின் 168 கிராமங்களில் உள்ள 1.5 இலட்சம் விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதியை அளிக்க இருக்கின்றது.
இந்தத் திட்டம் நிறைவு செய்யப்பட்ட பின்பு, ஏறத்தாழ 4 இலட்சம் மக்கள் தூய்மையான குடிநீரைப் பெற உள்ளனர்.
இந்தத் திட்டத்தின் கீழ் நீர்ப்பாசன வசதியானது 15,000 ஹெக்டேர் நிலப் பகுதிக்கு வழங்கப்பட உள்ளது.