இந்திய அரசானது மேகக் கணிமை, தரவு மைய செயல்திறன் மற்றும் அறநெறிசார் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றுக்கான நாட்டின் முதல் தரநிலைகளை அறிவித்துள்ளது.
இந்தியத் தரநிலைகள் பணியகம் (BIS) 2018 இன் கீழ் இந்த தரநிலைகளை அறிவித்து உள்ளது.
இந்த தரநிலைகள் சர்வதேச தரநிலைப்படுத்தல் அமைப்பு (ISO) மற்றும் சர்வதேச மின் தொழில்நுட்ப ஆணையத்தின் (IEC) சர்வதேசக் கட்டமைப்புகளுடன் இணைக்கப் பட்டு உள்ளன.
தரவு மையங்களின் குளிரூட்டும் செயல்திறனை மதிப்பிடுவதற்கு குளிரூட்டும் திறன் விகிதம் (CER) போன்ற நடவடிக்கைகளை அவை அறிமுகப்படுத்துகின்றன.
இந்தத் தரநிலைகள் செயற்கை நுண்ணறிவில் (AI) வெளிப்படைத்தன்மை மற்றும் சார்பு குறைப்பு போன்ற நெறிமுறைக் கொள்கைகளையும் ஊக்குவிக்கின்றன.