ஒரு புதிய அரசாணையின் மூலம் புற்றுநோயை 'அறிவிக்கப்பட வேண்டிய நோயாக' தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.
அனைத்து மருத்துவமனைகள், சிகிச்சையகங்கள், ஆயுஷ் (AYUSH - ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி) மையங்கள் மற்றும் ஆய்வகங்கள் ஆகியன புற்றுநோய் பாதிப்புகள் மற்றும் இறப்புகளை ஒரு மாதத்திற்குள் அரசுக்குக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.
முறையான பதிவுகளைப் பராமரிப்பதற்காக மையப்படுத்தப்பட்ட இணைய வழித் தளம் மூலம் தரவுகள் சேகரிக்கப்படும்.
தேசியப் புற்றுநோய் பதிவேட்டிற்குத் தரவுகளை அனுப்புவதற்கு முன்பு, MNJ புற்றுநோயியல் நிறுவனம் அதனைச் சரிபார்க்கும்.
இந்நோயை ஆரம்பத்திலேயே கண்டறிதல், சிறந்த சிகிச்சை அளித்தல் மற்றும் சுகாதாரத் திட்டமிடலை மேம்படுத்துதல் ஆகியவையே இதன் முக்கிய நோக்கமாகும்.