மகாராஷ்டிராவின் மாநில தேர்தல் ஆணையம் ஆனது, ஜில்லா பரிஷத் மற்றும் பஞ்சாயத்து சமிதி தேர்தல்களுக்கு மார்க்கர்-பேனா மை துடைக்கப்படக் கூடியதாக உள்ளது என்ற புகார்களைத் தொடர்ந்து பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் அழியாத மைக்கு மாற முடிவு செய்துள்ளது.
மீண்டும் வாக்களிப்பதைத் தடுக்க வாக்களித்த பிறகு வாக்காளரின் விரலில் அழியாத மை தடவப்படுகிறது.
தேர்தல் மோசடியைத் தடுக்க வேண்டி இந்தியா 1962 ஆம் ஆண்டில் (மூன்றாவது பொதுத் தேர்தல்) இதைப் பயன்படுத்தத் தொடங்கியது.
இந்த மையில் வெள்ளி நைட்ரேட் உள்ளது என்பதோடுஇது தோல் மற்றும் ஒளியுடன் வினை புரிந்து நீண்ட கால இருண்ட கறையை உருவாக்குகிறது.
அகற்றப்படக் கூடிய மார்க்கர் பேனாக்களைப் போலல்லாமல் பாரம்பரிய மையானது நம்பகத் தன்மை மற்றும் தேர்தல் ஒருமைப்பாட்டை உறுதி செய்கிறது.