கனட நாட்டின் பிரதமர் ஐஸ்டீன் ட்ரூடோ அரிதாகப் பயன்படுத்தப்படும் அவசர கால அதிகாரங்களைப் பயன்படுத்தினார்.
இது “சுதந்திர அணிவகுப்பு” என்று அழைக்கப்படும் எதிர்ப்பாளர்களின் முற்றுகைகள் மற்றும் பொதுச் சீர்குலைவுகளை முடிவுக்கு கொண்டு வருவதில் மாகாணங்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக மேற்கொள்ளப்படுகிறது.
சுதந்திர அணிவகுப்பு என்பது கனடாவில் நடைபெற்று வரும் தொடர் போராட்டங்கள் மற்றும் முற்றுகைகள் ஆகும்.
கோவிட் – 19 தடுப்பூசி தொடர்பான ஆணைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு எதிராக சரக்குந்து ஓட்டுநர்களால் இந்த முற்றுகைகள் தொடங்கப்பட்டன.