அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், நாகலாந்து மற்றும் மிசோரம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் எவர் ஒருவரையும் கைது செய்யவும் ஆணை இல்லாமல் எந்த ஒரு இடத்தையும் சோதனையிடவும் மத்திய அரசினால் அஸ்ஸாம் ரைபில்ஸ் வீரர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
“அஸ்ஸாம் ரைபில்ஸ் படையில் அதிகாரி நிலையில் உள்ளவர்கள் அல்லது அதற்கு இணையான கீழ்நிலையில் உள்ள அதிகாரிகளுக்கு” குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி இந்த அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாம் ரைபில்ஸ் என்பது வடகிழக்கு மாநிலங்களில் செயல்படும் முதன்மையான கிளர்ச்சி எதிர்ப்புப் படையாகும்.
மேலும் இது முக்கியமான இந்திய–மியான்மர் எல்லைப் பகுதியையும் பாதுகாக்கிறது.
ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டமானது வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகளில் செயல்பாட்டில் உள்ளது. இச்சட்டம் இந்தப் பகுதியில் பணியாற்றும் இராணுவத்திற்கும் அதே போன்ற அதிகாரத்தை வழங்குகிறது.