1725 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதியன்று பிறந்த அகிலியாபாய் ஹோல்கர், மால்வா இராட்சியத்தின் ஹோல்கர் இராணி ஆவார்.
அவர் இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை கொண்ட பெண் ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
அவர் 1733 ஆம் ஆண்டு மல்ஹர் ராவ் ஹோல்கரின் மகனான கந்தேராவ் ஹோல்கரை மணந்தார்.
கந்தேராவ் 1745 ஆம் ஆண்டு கும்ஹர் கோட்டை முற்றுகையின் போது இறந்தார்.
பின்னர் அஹில்யாபாய் மால்வாவின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு 1767 ஆம் ஆண்டு இந்தூரின் ஆட்சியாளரானார்.
அவர் குஷாலி ராம், மராத்தியக் கவிஞர் மோரோபந்த் மற்றும் ஷாஹிர் அனந்தபண்டி போன்ற அறிஞர்களை ஆதரித்தார்.
அவரது மரபினை நன்கு கௌரவிக்கும் வகையில் மகாராஷ்டிரா மாநில அரசானது 'புண்யஷ்லோக் அஹில்யாபாய் ஹோல்கர் சமாரக் ஸ்தல்' என்ற நினைவிடத்தினை உருவாக்க உள்ளதாக அறிவித்துள்ளது.