TNPSC Thervupettagam
January 15 , 2026 7 days 59 0
  • 2020 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தியாவின் புதிய விமான நிறுவனமான ஆகாசா ஏர், சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தில் (IATA) உறுப்பினராகியுள்ளது.
  • உலகளவில் சுமார் 360க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற IATA அமைப்பு உலகளாவிய விமானப் போக்குவரத்தில் 80% பங்கிற்கும் அதிகமானவற்றை நிர்வகிக்கிறது.
  • 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆகாசா IATA செயல்பாட்டுப் பாதுகாப்புத் தணிக்கையில் (IOSA) தேர்ச்சி பெற்றது.
  • இந்தியாவில் இப்போது ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, ஆகாசா ஏர் மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகிய ஐந்து IATA உறுப்பினர் விமான நிறுவனங்கள் உள்ளன.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் 226 போயிங் 737 MAX விமானங்களை இயக்க ஆகாசா திட்டமிட்டுள்ளது என்பதோடு மேலும் உலகளாவிய போட்டித்தன்மை வாய்ந்த விமான நிறுவனமாக மாறுவதையும் அது நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்