வான்வழிப் போக்குவரத்து அமைச்சகமானது “ஆகாஷா ஏர்” என்ற புதிய விமான நிறுவனத்திற்கு இந்தியாவில் அதன் சேவையினைத் தொடங்குவதற்காக வேண்டி தடையின்மைச் சான்றிதழை வழங்கியுள்ளது.
ஆகாஷா ஏர் என்பது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அலுவலர் வினய் தூபே மற்றும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஆகியோரால் நிறுவப் பட்டதாகும்.
2022 ஆம் ஆண்டின் மத்தியில் இந்த நிறுவனம் தனது சேவையைத் தொடங்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஆகாஷா ஏர்லைன் ஒரு மிகக் குறைந்த விலையிலான விமானச் சேவையாகும் (Ultra-low-cost carrier service).