December 27 , 2025
6 days
82
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆகாஷ்-NG எறிகணை அமைப்பின் பயனர் மதிப்பீட்டுச் சோதனைகளை (UET) நிறைவு செய்துள்ளது.
- ஆகாஷ்-NG (அடுத்த தலைமுறை நுட்பம்) என்பது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட நிலப்பரப்பிலிருந்து வானில் ஏவப்படும் எறிகணையாகும்.
- இது விமானம், ஆளில்லா விமானங்கள் மற்றும் சீர்வேக எறிகணைகளை அழிக்கப் பயன்படுகிறது.
- இலக்குகளை மிகவும் துல்லியமாக நிர்ணயிக்க இந்த எறிகணையில் உள்நாட்டிலேயே உருவாக்கப் பட்ட ரேடியோ அதிர்வெண் (RF) உணர்வி உள்ளது.
- இது நீண்ட தூரச் செயல்பாடுகள் மற்றும் விரைவான செயல்பாட்டிற்காக இரட்டை உந்துதல் கொண்ட திட எரிபொருள் சார்ந்த ஏவு அமைப்பு மோட்டாரைப் பயன்படுத்துகிறது.

Post Views:
82