செயற்கை நுண்ணறிவினால் இயக்கப்படும், முழுமையாகத் தானியங்கி முறையில் செயல்படும் வகையில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் ‘ஆகாஷ்தீர்’ எனும் வான்வழிப் பாதுகாப்பு அமைப்பானது, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தினால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது.
இது இந்திய இராணுவத்தின் பல்லடுக்கு வான்வழிப் பாதுகாப்பு (AD) கட்டமைப்பின் ஒருங்கிணைந்தப் பகுதியாகும்.
பாகிஸ்தான் எறிகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களைக் கண்டறிதல், அதனை அடையாளம் காணுதல், கண்காணித்தல் மற்றும் எதிர்கொள்வதில் இது மிக முக்கியப் பங்கு வகித்தது.