இந்தியக் கடற்படையானது 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதியன்று, 'ஆண்ட்ரோத்' என்று பெயரிடப்பட்ட குறைவான ஆழம் கொண்ட பகுதியில் இயங்கும் இரண்டாவது நீர்மூழ்கி எதிர்ப்பு போர் கப்பலை (ASW-SWC) பெற்றது.
இந்தக் கப்பலானது கொல்கத்தாவின் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் (GRSE) நிறுவனத்தால் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்டது.
தோராயமாக 77 மீட்டர் நீளம் கொண்ட 'ஆண்ட்ரோத்' டீசல் எஞ்சின்-வாட்டர்ஜெட் எஞ்சின் கலவையால் இயக்கப் படும் மிகப்பெரிய இந்தியக் கடற்படை போர்க் கப்பல் ஆகும்.
இந்தக் கப்பலானது, கடற்படையின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பல் திறன் மற்றும் கடலோரக் கண்காணிப்புத் திறன்களை மேம்படுத்துகிறது.
'ஆண்ட்ரோத்' என்ற பெயரானது லட்சத்தீவு தீவுக் கூட்டத்தில் உள்ள ஆண்ட்ரோத் தீவிலிருந்து பெறப்பட்டது.