எதிர்காலத்திற்கு ஏற்ற டிஜிட்டல் அடையாளத்தை வலுப்படுத்துவதற்காக இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆனது ஆதார் கொள்கை 2032 கட்டமைப்பை வெளியிட்டுள்ளது.
இந்த கட்டமைப்பு ஆனது செயற்கை நுண்ணறிவு, தொடர் சங்கிலித் தொழில்நுட்பம், குவாண்டம் கணினி மற்றும் மேம்பட்ட மறைகுறியாக்கத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது.
இந்தியாவின் டிஜிட்டல் அடையாள சூழல் அமைப்பை மறு நிர்ணயம் செய்வதற்கும் அடுத்தத் தலைமுறை தொழில்நுட்பத்திலான டிஜிட்டல் நிர்வாகத்தை விரைவுபடுத்தச் செய்வதற்குமான ஒரு செயல் திட்டத்தினை வழங்கச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.