இந்திய உச்ச நீதிமன்றமானது தனது அமர்வில் ஒரு பெரும்பான்மை அடிப்படையில், அதன் 2018 ஆம் ஆண்டின் தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரும் தொடர் மனுக்களைத் தள்ளுபடி செய்துள்ளது.
2018 ஆம் ஆண்டுத் தீர்ப்பானது நாடாளுமன்றத்தில் ஆதார் சட்டத்தை பண மசோதாவாக நிறைவேற்ற வேண்டி அதற்கு சான்றளித்த மக்களவை சபாநாயகரின் முடிவையும் அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டதையும் உறுதி செய்தது.
இது மாநிலங்களவையில் பெரும்பான்மை ஒப்புதல் பெறாமலேயே பண மசோதாவாக நிறைவேற்ற வழிவகை செய்கின்றது.
ஆதார் சட்டத்தின் 7வது பிரிவானது நலத் திட்டங்களின் கீழ் மானியங்கள், சேவைகள் அல்லது பயன்களுக்கான செலவினமானது இந்தியத் தொகுப்பு நிதியிலிருந்து மேற்கொள்ளப் படும் என்று கூறுகின்றது.
இதன் காரணமாக இந்த மசோதாவானது பண மசோதாவாக நிறைவேற்றத் தகுதி பெற்றுள்ளது.