TNPSC Thervupettagam

ஆதிச்சநல்லூரில் மணல் அகழ்வு கட்டுப்பாடு

December 15 , 2025 6 days 102 0
  • ஆதிச்சநல்லூர் தொல்பொருள் தளத்திற்கு அருகில் அல்லது கிராமத்திற்குள் மணல் அகழ்வு அனுமதிக்கப்படாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு தீர்ப்பளித்தது.
  • 2016 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவை விசாரித்து ஓர் ஈராயம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
  • இந்த மனுவானது, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் இரும்புக் காலப் புதைவிடத்திற்கு அருகில் மணல் அகழ்வு மேற்கொள்வது தொடர்பானதாகும்.
  • வேலி அமைக்கப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சித் தளத்தில் இந்தியத் தொல்பொருள் ஆய்வு மையம் (ASI) அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது.
  • ஆதிச்சநல்லூர் கிராமத்தில் மணல் அள்ளுதல் அல்லது குவாரி உரிமம் வழங்கப்படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்