ஆபத்தான நிலையில் உள்ள யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய சின்னங்களின் பட்டியல் 2026
July 31 , 2026 13 hrs 0 min 33 0
தென்கொரியாவின் பூசானில் நடைபெற்ற 48வது உலகப் பாரம்பரியக் குழுக் கூட்டத்தின் போது, யுனெஸ்கோ ஆறு இடங்களை ஆபத்தான நிலையில் உள்ள உலகப் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது.
ஆபத்தான பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட மூன்று உலகப் பாரம்பரிய இடங்கள் போமா-படிங்கிலோ வலசைப்போகும் நிலப்பரப்பு (தெற்கு சூடான்), மவுண்ட் அமேல் கோட்டைகள் (லெபனான்) மற்றும் செபாஸ்டியா (பாலஸ்தீன அரசு) ஆகும்.
ஆபத்தான பட்டியலில் சேர்க்கப்பட்ட ஏற்கனவே உள்ள மூன்று உலகப் பாரம்பரிய இடங்கள் பழங்கால நகரமான டாரிக் செர்சோனீஸ் மற்றும் அதன் சோரா (உக்ரைன்), வரலாற்றுச் சிறப்புமிக்க உள் நகரமான பரமரிபோ (சுரினாம்) மற்றும் டயர் (லெபனான்) ஆகியனவாகும்.
தீவிரமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் இடங்களைப் பாதுகாப்பதற்காக, ஆபத்தான நிலையில் உள்ள உலகப் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியல் உலகப் பாரம்பரிய மாநாட்டின் (1972) கீழ் உருவாக்கப்பட்டது.
ஆயுத மோதல்கள், பருவநிலை மாற்றம், வேட்டையாடுதல், வனவிலங்கு கடத்தல், மாசுபாடு, கட்டுப்பாடற்ற நகரமயமாக்கல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை இதற்கான முக்கிய அச்சுறுத்தல்களில் அடங்கும்.