ஆகஸ்ட் மாத மத்தியில் தாலிபன்கள் பிடியில் ஆப்கானிஸ்தானின் காபூல் நகரம் விழுந்ததிற்குப் பிறகு, முதன்முறையாக ஆப்கானிஸ்தான் மக்களுக்குப் பரிசாக 5 லட்சம் கோவாக்சின் மருந்துகளை இந்தியா அனுப்பியுள்ளது.
ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில் தாலிபன்கள் ஆளும் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு இந்தியா வழங்கும் 2வது உதவி இதுவாகும்.
முன்னதாக டிசம்பர் 11 அன்று 1.5 டன்கள் மருந்து கொண்ட சரக்குப் பெட்டகமானது அனுப்பப் பட்டது.
இதற்கு முன்பு, பாகிஸ்தான் வழியாக 50,000 டன் கோதுமை அடங்கிய சரக்குப் பெட்டகத்தினை அனுப்பிட இந்தியா திட்டமிட்டுள்ளது.
எனினும் தாலிபன் அரசின் நிர்வாகத்தினை ஒரு அரசுமுறை ஆட்சியாக இதுவரையில் இந்தியா அலுவல்முறையில் அங்கீகரிக்கவில்லை.