இந்தியாவின் தலைமையின் கீழான ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையானது ஆப்கானிஸ்தானின் நிலவும் சூழ்நிலை மீதான தீர்மானத்தினை ஏற்றுக் கொண்டு உள்ளது.
ஆப்கானிஸ்தானை, எந்தவொரு நாட்டினை அச்சுறுத்தவோ (அ) தாக்கவோ அல்லது தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கவோ வேண்டி பயன்படுத்தக் கூடாது என இத்தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது.
இத்தீர்மானமானது அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளால் முன்வைக்கப் பட்டது.
இத்தீர்மானமானது அச்சபையின் 13 உறுப்பினர் நாடுகளின் ஆதரவு வாக்குகளோடு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நிரந்தர உறுப்பினர் நாடுகள் இந்த வாக்களிப்பைத் தவிர்த்து விட்டன.