2035 ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 3 மில்லியன் சுகாதாரப் பணியாளர்களைச் சேர்க்கும் நோக்கத்துடன், ஆப்பிரிக்க சுகாதாரப் பணியாளர் செயல்திட்டம் 2026–2035 ஐ ஆப்பிரிக்க சுகாதார அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டனர்.
சிறந்த திட்டமிடல், பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் பணியாளர்களைத் தக்கவைத்தல் ஆகியவற்றின் மூலம் கணிக்கப்பட்டுள்ள சுகாதாரப் பணியாளர்களின் பற்றாக் குறையை பாதியாகக் குறைப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவில் 5.72 மில்லியன் சுகாதாரப் பணியாளர்கள் இருந்தனர் அதே நேரத்தில் குறைந்தது 943,000 பயிற்சி பெற்ற சுகாதார நிபுணர்கள் வேலையில்லாமல் இருந்தனர்.
இத்திட்டமானது "திட்டமிடு, பயிற்றுவி மற்றும் தக்கவை" என்ற அணுகுமுறையைப் பின்பற்றுகிறது என்பதோடு இது பணியாளர் திட்டமிடல், தரமான கல்வி, வேலை உருவாக்கம் மற்றும் சிறந்த பணி நிலைமைகளில் கவனம் செலுத்துகிறது.
2035 ஆம் ஆண்டுக்குள், 10,000 பேருக்கு 27 ஆக இருக்கும் சுகாதார நிபுணர்களின் அடர்த்தியை 47 ஆக உயர்த்தவும், சராசரி வேலையின்மை விகிதத்தை 27 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாகக் குறைக்கவும் இது இலக்கு வைத்துள்ளது.
அடிஸ் அபாபாவில் நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆப்பிரிக்காவுக்கான பிராந்தியக் குழுவின் 76வது அமர்வில் இந்தச் செயல்திட்டம் ஏற்றுக் கொள்ளப் பட்டது.