உலக வானிலை அமைப்பு மற்றும் இதர நிறுவனங்கள் தனது புதிய அறிக்கையினை சமீபத்தில் வெளியிட்டன.
பருவநிலை மாற்றம் காரணமாக அடுத்த இருபது ஆண்டுகளில் ஆப்பிரிக்காவின் அரிய பனிப்பாறைகள் அழிந்து போகும் என்று இந்த நிறுவனங்கள் தங்களது அறிக்கையில் எச்சரித்துள்ளன.
ஸ்காட்லாந்தில் நடைபெற உள்ள ”ஐ.நா. பருவநிலை மாநாட்டை” முன்னிட்டு இந்த அறிக்கையானது வெளியிடப் பட்டது.
கென்யா மலை, கிளிமாஞ்சாரோ மலை மற்றும் உகாண்டாவிலுள்ள ருவன்சோரி மலைகள் ஆகியவற்றில் பனிப்பாறைகள் குறைந்து வருவது, விரைவான மற்றும் பரவலான மாற்றங்கள் வரவிருப்பதைக் குறிக்கும் அடையாளங்கள் என இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.