ஆப்பிரிக்காவிற்கான தொழில்மயமாக்கல் தினம் – நவம்பர் 20
November 23 , 2020 1961 days 645 0
இது 1989 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவிற்கான 2வது தொழிற்துறை வளர்ச்சிக்கு தேவைப்படும் பத்தாண்டு காலம் (1991-2000) என்ற ஒரு செயல் திட்டத்திற்குள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் ஏற்படுத்தப்பட்டது.
இது மடகாஸ்கர் தீவு உள்ளிட்ட அதன் முக்கிய நிலப்பகுதியின் புவியியல் சித்திரிப்பிற்கான ஒரு முக்கிய சின்னமாக விளங்குகின்றது.
2020 ஆம் ஆண்டின் கருத்துரு, “AFCFTA மற்றும் கோவிட் – 19 காலப் பகுதியில் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நீடித்த தொழில்மயமாக்கம்” என்பதாகும்.
2018 ஆம் ஆண்டு மார்ச் 21 அன்று ருவாண்டாவின் கிகாலியில் ஆப்பிரிக்க கண்ட தடையற்ற வர்த்தகப் பகுதியை (AFCFTA - African Continental Free Trade Area) உருவாக்குவதற்கான ஒரு ஒப்பந்தமானது கையெழுத்திடப்பட்டது.
இது சரக்கு மற்றும் சேவைகளுக்காக வேண்டி ஒரே ஆப்பிரிக்கச் சந்தையை உருவாக்கவும் அதிக எண்ணிக்கையிலான நாடுகளினால் மேற்கொள்ளப்படும் உலகின் ஒரு மிகப்பெரிய தடையற்ற வர்த்தகப் பகுதியை உருவாக்கவும் வழிவகை செய்கின்றது.