TNPSC Thervupettagam

ஆமே பதிபா ஆமா பசாரே திட்டம் – ஒடிசா

January 20 , 2026 14 hrs 0 min 11 0
  • தாய்மொழியில் ஆரம்பகாலக் குழந்தைப் பருவக் கல்வியை வழங்குவதற்காக ஒடிசா அரசு ‘ஆமே பதிபா ஆமா பசாரே’ திட்டத்தைத் தொடங்கியது.
  • இந்தத் திட்டம் 3 முதல் 6 வயதுடைய குழந்தைகளுக்கான ஐந்து ஆண்டு முயற்சி ஆகும்.
  • இது முதலில் கியோஞ்சர், காந்தமால், கஜபதி, ராயகடா, நபரங்பூர் மற்றும் மல்கன்கிரி மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.
  • முண்டா, குய், சௌரா, குவி, கோண்டி மற்றும் கோயா போன்ற பழங்குடியின மொழிகளில் கற்பித்தல் செய்யப்படும்.
  • அங்கன்வாடி பணியாளர்கள் மொழி சார்ந்தப் பயிற்சி மற்றும் கற்றல் நூல்களைப் பெறுவார்கள்.
  • இந்தத் திட்டம் தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 மற்றும் அரசியலமைப்பின் சரத்து 350A (ஆரம்பக் கல்வி நிலையில் தாய்மொழியில் பயிற்றுவித்தல்) ஆகியவற்றுடன் ஒத்துப் போகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்