TNPSC Thervupettagam
April 29 , 2026 12 hrs 0 min 61 0
  • தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆலிவ் ரிட்லி ஆமையானது, இலங்கை முகடு (Sri Lanka Dome) பகுதியை நோக்கி வலசை போயுள்ளது/இடம்பெயர்ந்துள்ளது.
  • செயற்கைக்கோள் தொலை அளவியல் ஆய்வின் கீழ், ஆமைகளுக்கு அடையாள வில்லைகள் பொருத்தப்பட்டு சென்னை கடற்கரையில் விடுவிக்கப்பட்டன.
  • ஆமைகளின் வலசை போதல், முட்டையிடுதல் மற்றும் அவற்றின் நகர்வு முறைகளைக் கண்காணிப்பதற்காக, இந்திய வனவிலங்கு நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.
  • இலங்கை முகடு என்பது கடலடி நீர் மேலெழும்பும் பருவகாலப் பகுதியாகும், இது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நீரைக் கொண்டு வருவதால், மிதவை உயிரினங்கள், மீன்கள், திமிங்கிலங்கள் மற்றும் ஆமைகளை ஈர்க்கிறது.
  • இப்பகுதி மே மாதத்தில் உருவாகி, ஜூலை மாதத்தில் உச்சத்தை அடைந்து, செப்டம்பர் மாதத்திற்குள் குறைகிறது, இதனால் இது இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு முக்கிய உணவுப் பகுதியாகத் திகழ்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்