TNPSC Thervupettagam

ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்களின் கட்சித் தாவல் விவகாரம்

April 27 , 2026 6 days 87 0
  • ஆம் ஆத்மி கட்சியின் (AAP) பலத்தில் மூன்றில் இரண்டு பங்கை விட அதிகமான ஏழு மாநிலங்களவையைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாரதிய ஜனதா கட்சிக்கு (BJP) தாவியுள்ளனர்.
  • இந்த நடவடிக்கையை சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்புக்கு முரணானது என்று கூறியுள்ள ஆம் ஆத்மி கட்சி, அவர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரவுள்ளது.
  • அக்கட்சி, இந்திய அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணையைச் சுட்டிக்காட்டியது; இவ்வட்டவணையானது பிளவுகளை அங்கீகரிப்பதில்லை என்பதோடு, மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் நடைபெறும் இணைப்புகளை மட்டுமே அனுமதிக்கிறது.
  • தகுதி நீக்கம் குறித்த முடிவை எடுக்கும் அதிகாரம் மாநிலங்களவைத் தலைவரிடம் (இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்) உள்ளது.
  • 1985 ஆம் ஆண்டின் 52-வது திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்ட கட்சித் தாவல் தடைச் சட்டமானது அரசியல் கட்சி உறுப்பினர்களின் தாவல்களைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு உள்ளது; தானாக முன்வந்து கட்சி உறுப்பினர் பதவியைத் துறப்பது அல்லது கட்சியின் கொறடா உத்தரவை மீறுவது ஆகிய காரணங்களுக்காக உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்படலாம்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்