நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரினார்.
நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் 14 பொதுமக்கள் கொல்லப் பட்டதைத் தொடர்ந்து இது கோரப் பட்டது.
2021 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில், உள்துறை அமைச்சகம் ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தின் (AFSPA) படி மேலும் ஆறு மாதங்களுக்கு நாகாலாந்து மாநிலம் முழுவதையும் "அமைதி குறைவான பகுதி" என்று அறிவித்தது.
இந்தச் சட்டமானது அமைதி குறைவான பகுதிகளில் பொது ஒழுங்கைப் பராமரிக்க ஆயுதப் படைகளுக்கு சிறப்பு அதிகாரத்தை வழங்குகிறது.