ஆயுஷ் அமைச்சகமானது இந்தியா முழுவதும் சுமார் 45 இடங்களில் ‘ஆயுஷ் ஆப்கே த்வார்’ எனும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
ஆயுஷ் பவன் ஊழியர்களுக்கு மருத்துவக் குணங்கள் நிறைந்த செடிகளை வழங்கி ஆயுஷ் இணை அமைச்சர் இந்தப் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார்.
ஒரு வருடத்தில் இந்தியாவிலுள்ள சுமார் 75 லட்சம் வீடுகளுக்கு மருத்துவக் குணம் நிறைந்த மரக்கன்றுகளை வழங்குதல் என்ற நோக்கத்தோடு ஆயுஷ் ஆப்கே த்வார் என்ற பிரச்சாரம் தொடங்கப்பட்டது.