ஹரியானாவின் குருகிராமில் உள்ள ஆரவல்லி உயிரிப் பல்லுயிர்ப் பெருக்கப் பூங்கா இந்தியாவின் முதலாவது “பரப்பளவு அடிப்படையிலான இதர செயல் திறன் மிக்க நடவடிக்கை” (other effective area-based conservation measures) தளமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது உலக ஈரநிலங்கள் தினத்தன்று சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தினால் அறிவிக்கப்பட்டது.
பாதுகாக்கப்படாத ஆனால் உயிரிப் பல்லுயிர்ப் பெருக்கத்திற்குப் பெரும் பங்கினை அளிக்கும் பகுதிகளுக்கு சர்வதேச இயற்கை வளங்காப்பு அமைப்பு இந்தக் குறியீட்டினை வழங்குகிறது.
இந்தக் குறியீடானது, சர்வதேச வரைபடத்தில் இந்தப் பகுதியினை ஒரு பல்லுயிர்ப் பெருக்கத்தின் முக்கியப் பகுதியாக குறிப்பிடுகிறது.