மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசியத் தகவல் மையமானது “ஆரோக்கிய சேது” என்ற ஒரு செயலியைத் தொடங்கியுள்ளது.
இந்த செயலியானது கோவிட் – 19 தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் வேறு ஒரு நபரிடம் இருந்து 6 அடி வரம்பிற்குள் இருக்கும் போது அந்த நபரை (பாதிக்கப்படாமல் இருப்பவரை) எச்சரிக்கின்றது.
இந்தச் செயலியானது கோவிட் – 19 நோயாளியின் தகவலைக் குறித்து ஆராயும் அதே சமயத்தில் பாதிக்கப்பட்டவரின் தனியுரிமையை எந்த விதத்திலும் பாதிக்காது.