TNPSC Thervupettagam

ஆரோஹன் திட்டம்

August 30 , 2025 25 days 83 0
  • சுங்கச் சாவடி ஊழியர்களின் குழந்தைகளின் கல்வி ஆர்வங்களை ஆதரிப்பதற்காக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஆரோஹன் திட்டத்தைத் தொடங்கி உள்ளது.
  • இந்தத் திட்டமானது புது டெல்லியில் உள்ள வெர்டிஸ் உள்கட்டமைப்பு அறக் கட்டளையுடன் இணைந்து தொடங்கப்பட்டது.
  • ஆரோஹன் திட்டமானது, நிதி சார் தடைகளை நீக்கி, நலிவடைந்தப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தரமான கல்விக்கான சமமான அணுகலை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது பெண்கள், முதல் தலைமுறை கற்பவர்கள் மற்றும் பட்டியலிடப்பட்ட சாதியினர், பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர், இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆதரவளிப்பதில் கவனம் செலுத்துகிறது.
  • இந்தத் திட்டத்தின் முதல் கட்டம் ஆனது, SMEC அறக்கட்டளையின் முன்னெடுப்பான பாரத் கேர்ஸ் அறக்கட்டளையினால் செயல்படுத்தப்படும்.
  • 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை அமல்படுத்தப் படும் முதல் கட்டத்திற்கு 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இந்தத் திட்டமானது 11 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை 500 மாணவர்களுக்கு ஆண்டிற்கு 12,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும்.
  • இது உயர்கல்வியைத் தொடரும் 50 மாணவர்களுக்கு தலா 50,000 ரூபாய் உதவித் தொகையுடன் ஆதரவளிக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்