January 7 , 2026
2 days
42
- ஆர்க்டிக் பெருங்கடல் நீரில் செட்டேசியன் மோர்பிலிவைரஸை அறிவியலாளர்கள் முதன்முறையாகக் கண்டறிந்துள்ளனர்.
- செட்டேசியன் மோர்பிலிவைரஸ் என்பது திமிங்கலங்கள், ஓங்கில்கள், கடற்பன்றிகள் மற்றும் வலவம் திமிங்கலங்களைப் பாதிக்கும் அதிகத் தொற்று மிக்க வைரஸ் ஆகும்.
- இந்த வைரஸ் கடல் வாழ் பாலூட்டிகளின் சுவாசம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நரம்பு மண்டலங்களைத் தாக்குகிறது.
- இது முன்னர் வடக்கு அட்லாண்டிக், மத்தியத் தரைக்கடல் கடல் மற்றும் பசிபிக் பெருங் கடல் பகுதிகளில் பதிவாகியுள்ளது.
- இந்தக் கண்டறிதல் ஆர்க்டிக் பகுதியில் புதிய நோய் அபாயங்களைக் குறிப்பதுடன், திமிங்கல இடம்பெயர்வு முறைகளில் ஏற்படும் மாற்றங்களுடன் தொடர்புடையதாக உள்ளது.

Post Views:
42