TNPSC Thervupettagam

ஆர்மேனியர்கள் படுகொலை என்பது இனப்படுகொலை

May 2 , 2021 1566 days 743 0
  • முதல் உலகப் போரின் போது ஆர்மேனியர்கள் படுகொலை செய்யப்பட்டதை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இனப்படுகொலை எனக் கூறுகிறார்.
  • 1915 ஆம் ஆண்டில் ஆர்மேனியர்களுக்கு இழைக்கப்பட்ட அட்டூழியங்களை இவ்வகையில் விவரித்த முதல் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆவார்.
  • துருக்கி நாடானது, அந்த அட்டுழியங்களை ஒப்புக் கொண்டாலும் இனப்படுகொலைஎன்று அதனைக் கூறுவதை ஏற்க மறுக்கிறது.

பின்னணி

  • 1915 ஆம் ஆண்டில் காகசஸ் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் ஓட்டமான் பேரரசானது ரஷ்யர்களிடம் ஒரு அவமானமிக்க தோல்வியைச் சந்தித்தது.
  • அப்போது ஆர்மேனியர்கள் தேசத்துரோகம் செய்ததாக துருக்கியர்கள் குற்றம் சாட்டினர்.
  • எனவே ஆர்மேனிய வீரர்கள், அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஆகியோர் தூக்கிலிடப் பட்டனர்.
  • குழந்தைகள் உட்பட நூற்றாயிரக்கணக்கான ஆர்மேனியர்கள் சிரியாவின் பாலைவனத்திற்கு வலுக் கட்டாயமாக இடம் மாற்றப்பட்டனர்.
  • இந்தப் பயணத்தின் போது பலர் உயிரிழந்தனர், மேலும் பலர் அந்தப் பாலைவனத்திலுள்ள சித்திரவதை முகாம்களை அடைந்த பின்னர் உயிரிழந்தனர்.
  • மொத்தத்தில் 1915 முதல் 1922 ஆம் ஆண்டு வரையிலான காலங்களில் நடைபெற்ற முதல் உலகப் போரில் ஆயிரக்கணக்கான ஆர்மேனியர்கள் கொலை, பசி மற்றும் நோயினால் அழிந்து போயினர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்