உலக சுகாதார அமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்ட ஓன்கோசெர்சியாசிஸ் பாதிப்பினை ஒழித்த முதல் ஆப்பிரிக்க நாடாக நைஜர் மாறியது.
ஆற்றுக்குருடு என்றும் அழைக்கப்படும் ஓன்கோசெர்சியாசிஸ், ஒட்டுண்ணி புழுவான ஒன்கோசெர்கா வால்வுலஸால் ஏற்படுகிறது.
வேகமாக ஓடும் ஆறுகளுக்கு அருகில் இனப்பெருக்கம் செய்யும் பாதிக்கப்பட்ட சிமுலியம் கருப்பு ஈக்கள் கடிப்பதால் இந்த நோய் பரவுகிறது.
பிரேசில் மற்றும் வெனிசுலாவின் சிறிய பகுதிகளில் பாதிப்புகளுடன், உலகளாவியப் பாதிப்புகளில் பெரும்பாலானவை ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதி மற்றும் ஏமனில் ஏற்படுகின்றன.
இந்த நோய் ஆனது, கடுமையான அரிப்பு, தோல்களில் மாற்றங்கள், கண் சேதம் ஆகியவற்றை ஏற்படுத்துவதோடு, மேலும் நிரந்தரப் பார்வைத் திறன் இழப்பிற்கு வழி வகுக்கும்.