பொது விவகாரங்கள் மையத்தினால் வெளியிடப்பட்ட ஆளுகைச் செயல்திறன் மீதான சமீபத்திய ஒரு அறிக்கையில் கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா ஆகியவை முன்னணி மாநிலங்களாக உள்ளன.
2020 ஆம் ஆண்டிற்கான தரவரிசையுடன் ஒப்பிடுகையில் ஆந்திரப் பிரதேசத்தைப் பின்னுக்குத் தள்ளி தெலுங்கானா மாநிலம் 3வது இடத்தைப் பெற்றுள்ளது.
ஜார்க்கண்ட மாநிலமானது இந்த ஆண்டு 15வது இடத்திலிருந்து 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்தக் குறியீட்டில் இடம் பெற்ற சிறு மாநிலங்களில் சிக்கிம், கோவா மற்றும் மிசோரம் ஆகியவை முன்னணியாளர்களாக உருவெடுத்துள்ளன.
ஒன்றியப் பிரதேசங்களில் புதுச்சேரி, ஜம்மு & காஷ்மீர் மற்றும் சண்டிகர் ஆகியவை முன்னணியாளர்களாக உருவெடுத்துள்ளன.
பொது விவகாரங்கள் மையமானது பெங்களூருவில் அமைந்துள்ள ஒரு இலாப நோக்கமற்ற ஆலோசனை சேவை வழங்கும் அமைப்பாகும்.