ஆள்கடத்தலுக்கு உள்ளானவர்கள் குறித்த சர்வதேச தினம் – ஆகஸ்ட் 30
August 31 , 2021 1763 days 599 0
உறவினர்களுக்கும் சட்டப்பூர்வப் பிரதிநிதிகளுக்கும் தெரியாத வகையில் மோசமான சூழ்நிலைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தனி நபர்களின் நிலை குறித்த கவனத்தை ஈர்ப்பதற்காக வேண்டி இத்தினமானது உருவாக்கப்பட்டது.
இத்தினமானது ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 30 அன்று அனுசரிக்கப்படுகிறது.
இது 2010 ஆம் ஆண்டு டிசம்பர் 21 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் உருவாக்கப் பட்டது.
ஆள்கடத்தலுக்கு உள்ளான அனைத்து நபர்களின் பாதுகாப்பிற்குமான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் நாடுகளின் தங்களது கடமைகளைப் பூர்த்தி செய்வதைக் கருத்தில் கொள்வதையும் இந்த தினம் வழி வகுக்கிறது.