இந்தியக் கடலோரக் காவற் படையின் 7வது ஆழ்கடல் ரோந்துக் கப்பலான “விக்ரகா” ஆனது சென்னை அருகே உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தில் முறையாக அறிமுகப்படுத்தப் பட்டது.
இது 2015 ஆம் ஆண்டில் மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தினால் எல் & டி நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விடப்பட்ட 7 OPVகளில் கடைசிக் கப்பல் ஆகும்.
OPV (Offshore Patrol Vehicle) வகுப்புக் கப்பல்களின் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பை ஒரு தனியார் துறை கப்பல் கட்டுமான நிறுவனம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.