ஆஸ்திரேலியா-இந்தியா நீர்வளப் பாதுகாப்பு முன்னெடுப்பு
June 13 , 2022 1139 days 479 0
ஆஸ்திரேலியா-இந்தியா நீர்ப் பாதுகாப்பு முன்னெடுப்பிற்கான ஒரு தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக மேற்கொள்ளப்பட்ட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இது ஒருங்கிணைந்த நீர்ச் சுழற்சியின் முழுமையான நிர்வாகத்தை அடிப்படையாகக் கொண்ட நீர்வளப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ள நகரத்தினை மேம்படுத்துதல் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முன்னெடுப்பானது, இந்தியாவின் நீர்வள நிர்வாகத்தை வலுப்படுத்துவதோடு, கீழ்க்காண்பவற்றினை வழங்கும் முதலீடுகளையும் இது மேற்கொள்ளும்.
நகர்ப்புற நீர்ச் சேவைகள்,
நம்பகமான, பாதுகாப்பான நீர் மற்றும் சுகாதாரச் சேவைகளை அணுக பின்தங்கியச் சமூகங்களுக்கு ஆதரவு வழங்குதல்.