ஆஸ்திரேலியா மற்றும் சீனாவின் பட்டை மற்றும் சாலை ஒப்பந்தம்
April 29 , 2021 1508 days 542 0
தேச நன்மைக்காக பட்டை மற்றும் சாலை முன்னெடுப்பின் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக ஆஸ்திரேலிய அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது.
2018 ஆம் ஆண்டில் விக்டோரிய மாகாண அரசு சீனாவுடன் இரண்டு ஒப்பந்தங்களை மேற்கொண்டது.
அந்த மாகாணத்தில் உட்கட்டமைப்பினை மேம்படுத்துவதற்காக ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அந்த மாகாணத்தில் சீன முதலீடுகளை கொண்டு வரும் நோக்கில் 2019 ஆம் ஆண்டில் இரண்டாவது ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த இரு ஒப்பந்தங்களும் சீனாவின் பட்டை மற்றும் சாலை எனும் முன்னெடுப்பின் கீழ் மேற்கொள்ளப் பட்டன.
சமீபத்தில் இந்த இரு ஒப்பந்தங்களையும் ஆஸ்திரேலிய அரசு ரத்து செய்துள்ளது.
குறிப்பு
2020 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் ஆஸ்திரேலிய அரசு, ஆஸ்திரேலிய வெளிநாட்டு உறவுகள் (மாகாணம் மற்றும் ஒன்றியச் சீரமைப்பு) சட்டத்தினை அறிமுகப் படுத்தியது.
வெளிநாடுகள் மற்றும் மாகாண அரசுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு ஒப்பந்தத்தையும் ரத்து செய்தவற்கு ஆஸ்திரேலிய அரசிற்கு இச்சட்டம் அதிகாரம் அளிக்கிறது.
ஒப்பந்தங்களால் தேச நன்மை பாதிக்கப்படும் எனும் நிலை வரும் போது அந்த நாட்டு அரசு இந்த நடவடிக்கையினை மேற்கொள்ளலாம்.