TNPSC Thervupettagam

இ-ரூபி டிஜிட்டல் பணவழங்கீட்டு முறை

August 4 , 2021 1466 days 728 0
  • 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 02 அன்று பிரதமர் நரேந்திர மோடி -ரூபி டிஜிட்டல் பணவழங்கீட்டு முறை என்ற ஒரு முறையினைத் தொடங்கி வைத்தார்.
  • -ரூபி என்பது இணையவழி ரசீது அடிப்படையிலான ஒரு பணவழங்கீட்டு முறை ஆகும்.
  • இது அரசிற்கும் பயனாளிகளுக்கும் இடையேயான தொடர்புகளை வரையறுக்கச் செய்வதற்காகத் தொடங்கப்பட்ட ஒரு முயற்சியாகும்.
  • இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மற்றும் வேறு எவருக்கும் சென்றடையா வண்ணம் அரசின் நலத் திட்டப் பலன்கள், குறிப்பிட்ட பயனாளிகளை சென்றடைவதை இத்தளம் உறுதி செய்கிறது.
  • -ரூபி என்பது பயனாளிகள் பற்று அட்டைகள், டிஜிட்டல் பணவழங்கீட்டுச் செயலிகள் () இணைய வங்கி வசதி போன்றவற்றைப் பயன்படுத்தாமலேயே ரசீதினைப் பெறச் செய்து ஒரு முறை பணம் செலுத்தக் கூடிய செயல்முறையாகும்.
  • இந்தியத் தேசியக் கொடுப்பனவு கழகமானது தனது ஒருங்கிணைந்த பணவழங்கீட்டு இடைமுகத் தளத்தில் இந்த இ-ரூபி தளத்தினை உருவாக்கியுள்ளது.
  • இது நிதிச் சேவைத் துறை, சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் மற்றும் தேசிய சுகாதார ஆணையம் ஆகியவற்றினால் இணைந்து தொடங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்