August 27 , 2021
1450 days
718
- தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகமானது இ-ஷ்ராம் தளத்தினைத் தொடங்கியுள்ளது.
- இந்தத் தளமானது முறைசாரா தொழிலாளர்களின் (ஷ்ரம் யோகிஸ்) குறித்த தேசிய அளவிலான தரவுத் தளமாக விளங்கும்.
- முறைசாரா தொழிலாளர்களை அடையாளம் காணுதல் என்ற பணியினை இத்தளம் மேற்கொள்ளும்.
- சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை இவர்களிடம் கொண்டு சேர்ப்பதில் இத்தளம் உதவும்.
- பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு 12 இலக்க தனித்துவ எண்ணுடன் கூடிய இ-ஷ்ராம் அட்டையானது வழங்கப்படும்.
- இந்த நடவடிக்கையானது மத்திய அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை ஒருங்கிணைக்கும்.

Post Views:
718