TNPSC Thervupettagam

“இடைவெளி குறித்த கவனம்”

April 2 , 2019 2317 days 721 0
  • ஆக்ஸ்பேம் இந்தியாவானது “இடைவெளி குறித்த கவனம் - இந்தியாவில் வேலைவாய்ப்பின் நிலைமை” என்ற தலைப்பு கொண்ட ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, தரமான வேலை வாய்ப்புகள் போதாமை மற்றும் சம்பள ஏற்றத்தாழ்வு ஆகியவை இந்தியத் தொழிலாளர் சந்தையில் சமத்துவமின்மை நிலவுவதைக் குறிக்கின்றன.
  • இந்த அறிக்கையானது சம்பளத்திலும் தினக் கூலியிலும் பாலின சமத்துவமற்ற தன்மை நிலவுவதை எடுத்துக் காட்டுகின்றது. மேலும் பெண்கள் எவ்வாறான பணியில் இருந்தாலும் அவர்கள் எவ்வாறு குறைந்த ஊதியத்தினைப் பெறுகின்றனர் என்பதையும் இது எடுத்துக் காட்டுகின்றது.
  • மேலும் இது NSSO (National Sample Survey Organisation) கணக்கெடுப்பின் அடிப்படையில் சராசரியாக ஒரு பணிக்குத் தகுதி வாய்ந்த ஆண் தொழிலாளர்கள் பெறும் ஊதியத்தை விட பெண் தொழிலாளர்கள் 34 சதவிகிதம் குறைவாகப் பெறுகின்றனர் என்றும் கூறுகின்றது.

ஆக்ஸ்பேம்

  • வறட்சி நிவாரணத்திற்கான ஆக்ஸ்போர்டு குழு - ஆக்ஸ்பேம் என்பது உலக வறுமையை ஒழிப்பதற்காக 1942 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒரு தொண்டு நிறுவனமாகும்.
  • ஆக்ஸ்பேமானது இந்தியாவில் மனிதாபிமான சேவையின் 67-வது ஆண்டை அனுசரிக்கின்றது.
  • 1951 ஆம் ஆண்டில் ஆக்ஸ்பேம் கிரேட் பிரிட்டன் ஆனது பீகார் வறட்சிக்கான தனது முதலாவது முழு அளவிலான மனிதாபிமான உதவி வழங்குவதைத் தொடங்கியது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்