இணைய நெறிமுறை அடிப்படையிலான காணொளி கண்காணிப்பு அமைப்பு
January 15 , 2020 2006 days 640 0
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட முகம் அடையாளம் காணும் தொழில்நுட்பமானது பெங்களூரு, மன்மத் மற்றும் பூசாவல் ஆகிய ரயில் நிலையங்களில் சோதனை அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது.
முக அடையாளம் காணும் முறையை ஏற்கனவே உள்ள தரவுதளங்களுடன் இணைத்து குற்றவாளிகளை அடையாளம் காண்பதே ரயில்வே பாதுகாப்புப் படையின் நோக்கமாகும்.
இந்திய ரயில்வே அமைப்பானது ரயில் நிலையங்களில் இணைய நெறிமுறை அடிப்படையிலான காணொளி அமைப்புகளை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளது.