TNPSC Thervupettagam

இணையவெளி குற்றத்திற்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கை

October 31 , 2025 16 hrs 0 min 15 0
  • இணையவெளிக் குற்றங்களுக்கு எதிரான ஐ.நா. உடன்படிக்கை, இணையவெளிக் குற்றங்களைத் தடுப்பதற்கும் அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமான உலகின் முதல் சட்டப்பூர்வ உலகளாவிய ஒப்பந்தமாகும்.
  • வியட்நாமின் ஹனோயில் 72 நாடுகளால் கையெழுத்திடப்பட்ட இது, மேலும் குறைந்தது 40 ஐ.நா. உறுப்பினர் நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட 90 நாட்களுக்குப் பிறகு நடைமுறைக்கு வந்தது.
  • அனைத்து கடுமையான குற்றங்களுக்கும் மின்னணு ஆதாரங்களைச் சேகரித்தல், பகிர்தல் மற்றும் பயன்படுத்துவதற்கான முதல் உலகளாவிய கட்டமைப்பை இது நிறுவுகிறது.
  • இந்த உடன்படிக்கை இணையவெளி சார்ந்த குற்றங்கள், இயங்கலை மோசடி, இயங்கலை வழி குழந்தை பாலியல் துஷ்பிரயோகம், குழந்தைகளைப் பாலியல் உறவிற்கு பயன்படுத்துதல் மற்றும் அந்தரங்க படங்களை ஒருமித்த கருத்து இல்லாமல் பரப்புதல் ஆகியவற்றை குற்றமாக்குகிறது.
  • இது இணையவெளிக் குற்ற வழக்குகளில் விரைவான சர்வதேச ஒத்துழைப்புக்கான முதல் உலகளாவிய 24/7 ஒத்துழைப்பு வலையமைப்பை உருவாக்குகிறது.
  • இணையவெளிக் குற்றங்களில் இயங்கலை மோசடி மற்றும் கடத்தல் போன்ற இணையவெளி சார்ந்த குற்றங்களும், போலியான குறுஞ்செய்திகளை அனுப்புதல், அடையாளத் திருட்டு, தீநிரல் மற்றும் பணயத் தீநிரல் போன்ற இணையவெளி சார்ந்த குற்றங்களும் அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்