இந்தியாவில் இந்தி இதழியலின் தொடக்கத்தை நினைவு கூரும் வகையில் ஆண்டு தோறும் மே 30 அன்று இந்தி இதழியல் தினம் அனுசரிக்கப்படுகிறது.
1826 ஆம் ஆண்டு மே 30 அன்று, இந்தியாவின் முதல் இந்தி நாளிதழான உடான்ட் மார்தாண்ட் ஆனது, பண்டிட் ஜுகல் கிஷோர் சுக்லாவால் கொல்கத்தாவிலிருந்து (அப்போதைய கல்கத்தா) தொடங்கப்பட்டது.
பொது விழிப்புணர்வை மேம்படுத்துதல், ஜனநாயகத்தை வலுப்படுத்துதல் மற்றும் இந்திய மொழிகளில் தகவல்களை அணுகுவதை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் இந்தி இதழியலின் பங்களிப்பை இந்த நாள் அங்கீகரிக்கிறது.
2026 ஆம் ஆண்டு இந்தியாவில் இந்தி இதழியலின் 200-வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.