2வது இந்திய அரிசி மாநாடானது, சமீபத்தில் ஒடிசாவின் கட்டாக் நகரில் உள்ள தேசிய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் தொடங்கப்பட்டது.
2023 ஆம் ஆண்டிற்கான இந்த மாநாட்டின் கருத்துரு, "நெல் ஆராய்ச்சியை மாற்றி அமைத்தல்" என்பதாகும்.
உலகளாவிய உணவு நெருக்கடி மற்றும் நெல் பயிர்களின் உற்பத்தி மற்றும் விளைச்சலை அதிகரிக்க உதவும் சமீபத்திய அறிவியல் முன்னேற்றங்கள் ஆகியவை குறித்து இந்த மாநாட்டில் கலந்தாலோசிக்கப்படும்.