இந்திய அறிவியல் மாநாட்டு அமைப்பின் 108வது வருடாந்திரக் கூட்டமானது நாக்பூரில் உள்ள ராஷ்டிரசாந்த் துகடோஜி மகாராஜ் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இந்த ஆண்டு இந்திய அறிவியல் மாநாட்டு அமைப்பின் மையக் கருத்துரு, “பெண்களுக்கான அதிகாரமளிப்புடன் கூடிய ஒரு நிலையான மேம்பாட்டிற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்” என்பதாகும்.
இந்த நிகழ்வோடு சேர்ந்து பழங்குடியினர் அறிவியல் மாநாடும் நடைபெற்றது.
இந்த மாநாட்டின் முதல் கூட்டமானது 1914 ஆம் ஆண்டில் நடைபெற்றது.