TNPSC Thervupettagam

இந்திய தரைப்படை பெண்களை இராணுவக் காவல் படையில் சேர்க்க முடிவு

September 9 , 2017 3267 days 1530 0
  • அரசானது பெண் போர்வீரர்களை இராணுவத்தின் தரைப்படையில் உள்ள பட்டாளப் பிரிவில் பணியமர்த்த முடிவு எடுத்துள்ளது. இது பாலினம் சார்ந்த குறிப்பிட்ட குற்றங்களை விசாரிப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவாகும். தோராயமாக 800 பெண்களை ஆண்டுதோறும் 52 நபர்கள் என்ற அளவில் பணியமர்த்தத் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
  • ஆனாலும் பெண்களை இராணுவத்தின் ஆயுதச் சண்டைப் பிரிவில் சேர்ப்பது நீண்ட நாள் பாதையாகும். ஏனெனில் இந்திய தரைப்படைப் பட்டாளப் பிரிவின் இராணுவக் காவல் படை மட்டுமே இந்த முடிவிற்கு ஆதரவாக உள்ளது. இந்திய தரைப்படை நான்கு ஆயுதப்பிரிவுகளை கொண்டது. அவை
  1. காலாட் படை
  2. இயந்திரக் காலாட் படை
  3. கவசப் படை
  4. பீரங்கிப் படை

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்