இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் 7 புதிய வட்டங்களை இந்திய கலாச்சார அமைச்சகமானது அறிவித்துள்ளது.
மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், கர்நாடகா, மேற்கு வங்கம் மற்றும் குஜராத்தில் புதிய வட்டங்கள் உருவாக்கப் பட்டுள்ளன.
திருச்சி, ராய்கஞ்ச், ராஜ்கோட், ஜபல்பூர், ஜான்சி & மீரட் ஆகியவை புதிய வட்டங்களாக அறிவிக்கப் பட்டுள்ளன.
கர்நாடகாவில் உள்ள ஹம்பி நகரமானது சர்வதேச அளவில் ஒரு புகழ்பெற்ற இடமாதலால் இது குறு வட்டம் என்ற நிலையில் இருந்து ஒரு முழுமையான வட்டமாக மாற்றப் பட்டுள்ளது.
முன்னதாக நாடு முழுவதும் 29 தொல்பொருள் ஆய்வு வட்டங்கள் இருந்தன.